திருப்போரூர்: "உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்" என காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கக் கூட்டம் கேளம்பாக்கத்தில் நடந்தது. சங்கச் செயலர் டேவிட் தலைமை தாங்கினார். சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக, பல சாதனைகளை ஏற்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊதிய விகிதமே பிளஸ் 2 வரை பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
தகுதிக்கேற்ப ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐயப்பன் வரவேற்றார். புஷ்பராஜ் நன்றி கூறினார்.