நிலை இறக்கம் செய்யப்பட்ட 1,057 அரசு ஆரம்ப பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், 437 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. கடந்த மாதம், 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. உயர்நிலைப் பள்ளியாக மாறியவுடன், 6 முதல் 10ம் வகுப்பு வரை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1 முதல் 5ம் வகுப்பு வரை, தனியாக பிரித்து, ஆரம்ப பள்ளியாக மாற்றப்படுகின்றன. இதன்படி, நிலை இறக்கம் செய்யப்பட்ட 1,057 ஆரம்ப பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் கணேசன் கூறுகையில், "தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதை நிரப்ப வலியுறுத்தியும் பயன் இல்லை. மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது,&'&' என்றார்.