ஆசிரியர் தகுதி தேர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக, மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, மாவட்டச் செயலர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கோகிலாம்பாள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், அனைத்து வகை ஆசிரியர் நியமனத்திற்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தகுதி தேர்வை கைவிட வேண்டும், கல்வித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.