துப்புரவு பணியாளர் பிள்ளைகளுக்கு கல்விக் கடன்
துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
நேஷனல் சபாயி கர்மசாரிஸ் பைனான்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த கல்விக் கடனை வழங்கி வருகிறது.
பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம் ஆகியவற்றில் பட்ட படிப்புகளும், பிசியோதெரபி, பாதாலஜி, நர்சிங் போன்ற படிப்புகளில் டிப்ளமோ படிப்புகளையும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் டூரிசம், ஜெனரிக் கேர் போன்ற துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை பிசிஏ, எம்சிஏ, ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளையும் படிக்க கல்விக் கட்டணத்தில் 90 விழுக்காடு அளவிற்கு கல்விக் கடனாகப் பெறலாம்.
இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.20 லட்சமும் (4 ஆண்டுகளுக்கு சேர்த்து) வழங்கப்படும்.