சென்னை: சென்னை மாவட்டத்திற்கான, பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல், வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கை: செய்தித்தாள் பார்த்து விண்ணப்பித்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2011ம் ஆண்டு நவ., 11ம் தேதி வரை பதிவு செய்த உடற்கல்வி, ஓவியம், இசை, தோட்டக்கலை, கணினி, வாழும் திறன், தகவல் திறன், தையல் ஆகிய பாடங்களில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள், அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள், வரும் 12ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நேர்காணலில், உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.