மதுரை: கல்வியுடன், உடற்கல்விக்கு முக்கியத்துவம் தருவது, மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர்(கே.ஆர்.எஸ்.,) பள்ளியின் சிறப்பு, என, பள்ளியின் விளையாட்டு விழாவில், முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 17வது விளையாட்டு விழாவில், முதல்வர் சாந்தி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பானுப்ரியா அறிக்கை வாசித்தார்.
போட்டிகளை துவக்கி வைத்து, முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் பேசியதாவது: மாவட்டத்தில் சிறந்ததாக, கே.ஆர்.எஸ்., பள்ளி உருவெடுத்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் படிக்க மட்டுமல்ல, விளையாடவும் ஏற்றதாக உள்ளது. கல்வியுடன், உடற்கல்விக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது, என்றார்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற &'கிரீன் ஹவுஸ்&' அணி வீரர்களுக்கு, கேடயம் வழங்கினார். மாணவர்களின் கராத்தே, யோகா, &'லெஸிம்&' கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மழலையர்களுக்கு &'ரயில் வண்டி&' போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி இயக்குனர் பாலசுப்ரமணியன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார். ஆசிரியர்கள் ஆன் ஜெபராணி, தீபலட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா!
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை விழா தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் சுகந்தி மணி, இயக்குநர்கள் மணி, பூபதி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம் மற்றும் நோபாளத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து 12 துறை வாரியாக வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல், பூசனி பொங்கல், ரவை பொங்கல், கற்கண்டு பொங்கல், பால் பொங்கல் உட்பட 12 வகையான பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருட்கள் வைத்து, மாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் பொங்கல் ஊட்டினார்.
கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் ஆகியோருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் வழங்கினார்.