சென்னை:குரூப்-2 தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே, "அவுட்' ஆனது குறித்து, தர்மபுரி, ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தேர்வாணைய உறுப்பினர்களுடன் நேற்று காலை நடத்திய ஆலோசனைக்குப் பின், குரூப்-2 தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுவதாக, அதன் தலைவர் நடராஜ், அதிரடியாக அறிவித்தார்.இத்தேர்வை வேறொரு தேதியில் நடத்துவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என்றும், அவர் தெரிவித்தார். கேள்வித்தாள் "அவுட்'ஆன விவகாரத்தில், ஆசிரியர்கள் மூன்று பேர் உட்பட ஆறு பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர். நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 3,631 இடங்களை நிரப்ப, குரூப்-2 நிலையில், நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஈரோட்டில், "லீக்':ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி, ஈரோடு சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுத வந்தபோது, கையால் எழுதப்பட்ட கேள்வி, பதில் தாளை வைத்திருந்தார். அவற்றை, சில தேர்வர் பார்த்தனர். பின், தேர்வு அறைக்குள் சென்று, கேள்வித்தாளை பார்த்தவர்கள், தனக்கொடி வைத்திருந்த அதே கேள்விகளும், பதில்களும் வரிசையாக கேட்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.தேர்வு முடிந்ததும், மைய கண்காணிப்பாளரிடம் புகார் கூறியதுடன், தனக்கொடியை கண்டுபிடித்து, அவரின் கேள்வி-பதில் தாளை நகல் எடுத்து, போலீசில் புகார் தெரிவித்தனர். கேள்வி எண் 131ல் இருந்து, 170 வரையில், கேள்வி-பதில்கள், கையால் எழுதப்பட்டிருப்பதும், அவை அப்படியே கேள்வித்தாளில் இடம் பெற்றிருப்பதும் உறுதியானதும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், முன்கூட்டியே கேள்வித்தாள், "லீக்' ஆனதாகவும் கூறப்பட்டது.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவியேற்றபின், தேர்வாணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, தேர்வாணையத்தில் இருந்த ஓட்டைகளை அடைத்தார். முந்தைய ஆட்சி காலத்தில் சின்னாபின்னமான தேர்வாணையத்தின் மதிப்பை தூக்கி நிறுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவர் பதவியேற்றபின் நடந்த பல தேர்வுகள், பலத்த கண்காணிப்புடனும், பாதுகாப்புடனும் நடந்து வருகின்றன. ஆலோசனை:இவ்வளவையும் மீறி, குரூப்-2 தேர்வு
கேள்வித்தாள் முன்கூட்டியே,
"லீக்' ஆனது, நடராஜ் மற்றும்
அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. சம்பவம் குறித்து, தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை உடனடியாக அனுப்பி வைக்குமாறு, நடராஜ் கேட்டுக்கொண்டார். அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு, கலெக்டர்களின் அறிக்கைகள் கிடைத்தன. இதையடுத்து, பகல் 1 மணிக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம், 1.30 வரை நடந்தது.
தேர்வு ரத்து:பின், நடராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வாணையம், கடந்த 12ம் தேதி, குரூப்-2 தேர்வை நடத்தியது. ஈரோடு மாவட்டத்தில், ஒரு தேர்வரிடம் இருந்து, தேர்வு முடிந்தபின் கையால் எழுதப்பட்ட கேள்வி மற்றும் பதில் அடங்கிய தாள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மையத்தில் தேர்வெழுதிய தேர்வர்களே, கலெக்டரிடம் புகார் அளித்தனர்.அது தொடர்பாக விசாரணை நடக்கிறது. கையால் எழுதப்பட்ட கேள்வி, பதிலும், தேர்வில் இடம்பெற்ற கேள்வி, பதிலும் ஒன்றாக இருந்ததால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.கேள்வித்தாள் முன்கூட்டியே, "லீக்' ஆகியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தோம். தர்மபுரி மாவட்டத்திலும், இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி, இரு முடிவுகளை எடுத்துள்ளோம்.
* அதன்படி, 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.
* தேர்வாணையமே, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, கேள்வித்தாள் தயாரிப்பு, அச்சடிப்பு, தேர்வை நடத்துவது வரை, அனைத்து நிலைகளிலும் தற்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வேறு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து, தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேலும், போலீஸ் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் முழுமையாக விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை, தேர்வாணையத்திற்கு அளிப்பர். அதனடிப்படையிலும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு நடராஜ் கூறினார்.
மற்றவர்களை மிதிப்பதா?பேட்டியில், நடராஜ் கூறியதாவது:ஈரோட்டில், கேள்வித்தாள் முன்கூட்டியே, "லீக்'ஆன விவகாரத்தை, அங்குள்ள தேர்வர்களே, போலீஸ் மற்றும் கலெக்டர்
கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள், கண்ணியமானவர்கள்; அவர்களை பாராட்டுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மற்றவர்களை மிதித்தாவது மேலே வர வேண்டும் என்று, சிலர் நினைக்கின்றனர். அது, மிகவும் வருத்தமாக உள்ளது. தேர்வாணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு, தேர்வர்களின் ஒத்துழைப்பு தேவை. தேர்வு தொடர்பாக எந்த தகவலையும், உடனுக்குடன் தேர்வாணையத்திற்கு தேர்வர்கள் தகவல் தெரிவிக்கலாம். மக்கள் ஏமாறக் கூடாது. இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.
மாட்டுபவர்களுக்கு தடை:ரத்தான குரூப்-2 தேர்வு, மிக விரைவில் நடத்தப்படும் என, நடராஜ் கூறினார். அப்போது, ஏற்கனவே விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய தேர்வர் மட்டும், தேர்வில் பங்கேற்கலாம் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது எனவும் கூறினார். தேர்வு முறைகேட்டில் சிக்கிய தேர்வர்கள், அடுத்து நடக்கும் குரூப்-2 தேர்வு உட்பட எந்த தேர்விலும் பங்கேற்க முடியாதபடி தடை விதிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
ஆறு பேர் கைது:இந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ரங்கராஜ், நாமக்கல் கோச்சிங் சென்டர் நிர்வாகி ராசப்பன், தேர்வர் தனக்கொடி கணவர் செந்தில் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கிடையே உள்ள தொடர்புகள், இவர்கள் யார், யாருக்கு கேள்வித்தாள் அடங்கிய நகலை வழங்கினர்; இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் யார் என்ற விவரங்கள் எல்லாம், போலீஸ் விசாரணையில் விரைவில் தெரியவரும்.
ஈரோட்டில், "லீக்':ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி, ஈரோடு சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுத வந்தபோது, கையால் எழுதப்பட்ட கேள்வி, பதில் தாளை வைத்திருந்தார். அவற்றை, சில தேர்வர் பார்த்தனர். பின், தேர்வு அறைக்குள் சென்று, கேள்வித்தாளை பார்த்தவர்கள், தனக்கொடி வைத்திருந்த அதே கேள்விகளும், பதில்களும் வரிசையாக கேட்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.தேர்வு முடிந்ததும், மைய கண்காணிப்பாளரிடம் புகார் கூறியதுடன், தனக்கொடியை கண்டுபிடித்து, அவரின் கேள்வி-பதில் தாளை நகல் எடுத்து, போலீசில் புகார் தெரிவித்தனர். கேள்வி எண் 131ல் இருந்து, 170 வரையில், கேள்வி-பதில்கள், கையால் எழுதப்பட்டிருப்பதும், அவை அப்படியே கேள்வித்தாளில் இடம் பெற்றிருப்பதும் உறுதியானதும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், முன்கூட்டியே கேள்வித்தாள், "லீக்' ஆனதாகவும் கூறப்பட்டது.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவியேற்றபின், தேர்வாணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, தேர்வாணையத்தில் இருந்த ஓட்டைகளை அடைத்தார். முந்தைய ஆட்சி காலத்தில் சின்னாபின்னமான தேர்வாணையத்தின் மதிப்பை தூக்கி நிறுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவர் பதவியேற்றபின் நடந்த பல தேர்வுகள், பலத்த கண்காணிப்புடனும், பாதுகாப்புடனும் நடந்து வருகின்றன. ஆலோசனை:இவ்வளவையும் மீறி, குரூப்-2 தேர்வு
கேள்வித்தாள் முன்கூட்டியே,
"லீக்' ஆனது, நடராஜ் மற்றும்
அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. சம்பவம் குறித்து, தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை உடனடியாக அனுப்பி வைக்குமாறு, நடராஜ் கேட்டுக்கொண்டார். அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு, கலெக்டர்களின் அறிக்கைகள் கிடைத்தன. இதையடுத்து, பகல் 1 மணிக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம், 1.30 வரை நடந்தது.
தேர்வு ரத்து:பின், நடராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வாணையம், கடந்த 12ம் தேதி, குரூப்-2 தேர்வை நடத்தியது. ஈரோடு மாவட்டத்தில், ஒரு தேர்வரிடம் இருந்து, தேர்வு முடிந்தபின் கையால் எழுதப்பட்ட கேள்வி மற்றும் பதில் அடங்கிய தாள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மையத்தில் தேர்வெழுதிய தேர்வர்களே, கலெக்டரிடம் புகார் அளித்தனர்.அது தொடர்பாக விசாரணை நடக்கிறது. கையால் எழுதப்பட்ட கேள்வி, பதிலும், தேர்வில் இடம்பெற்ற கேள்வி, பதிலும் ஒன்றாக இருந்ததால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.கேள்வித்தாள் முன்கூட்டியே, "லீக்' ஆகியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தோம். தர்மபுரி மாவட்டத்திலும், இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி, இரு முடிவுகளை எடுத்துள்ளோம்.
* அதன்படி, 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.
* தேர்வாணையமே, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, கேள்வித்தாள் தயாரிப்பு, அச்சடிப்பு, தேர்வை நடத்துவது வரை, அனைத்து நிலைகளிலும் தற்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வேறு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து, தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேலும், போலீஸ் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் முழுமையாக விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை, தேர்வாணையத்திற்கு அளிப்பர். அதனடிப்படையிலும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு நடராஜ் கூறினார்.
மற்றவர்களை மிதிப்பதா?பேட்டியில், நடராஜ் கூறியதாவது:ஈரோட்டில், கேள்வித்தாள் முன்கூட்டியே, "லீக்'ஆன விவகாரத்தை, அங்குள்ள தேர்வர்களே, போலீஸ் மற்றும் கலெக்டர்
கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள், கண்ணியமானவர்கள்; அவர்களை பாராட்டுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மற்றவர்களை மிதித்தாவது மேலே வர வேண்டும் என்று, சிலர் நினைக்கின்றனர். அது, மிகவும் வருத்தமாக உள்ளது. தேர்வாணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு, தேர்வர்களின் ஒத்துழைப்பு தேவை. தேர்வு தொடர்பாக எந்த தகவலையும், உடனுக்குடன் தேர்வாணையத்திற்கு தேர்வர்கள் தகவல் தெரிவிக்கலாம். மக்கள் ஏமாறக் கூடாது. இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.
மாட்டுபவர்களுக்கு தடை:ரத்தான குரூப்-2 தேர்வு, மிக விரைவில் நடத்தப்படும் என, நடராஜ் கூறினார். அப்போது, ஏற்கனவே விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய தேர்வர் மட்டும், தேர்வில் பங்கேற்கலாம் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது எனவும் கூறினார். தேர்வு முறைகேட்டில் சிக்கிய தேர்வர்கள், அடுத்து நடக்கும் குரூப்-2 தேர்வு உட்பட எந்த தேர்விலும் பங்கேற்க முடியாதபடி தடை விதிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
ஆறு பேர் கைது:இந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ரங்கராஜ், நாமக்கல் கோச்சிங் சென்டர் நிர்வாகி ராசப்பன், தேர்வர் தனக்கொடி கணவர் செந்தில் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கிடையே உள்ள தொடர்புகள், இவர்கள் யார், யாருக்கு கேள்வித்தாள் அடங்கிய நகலை வழங்கினர்; இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் யார் என்ற விவரங்கள் எல்லாம், போலீஸ் விசாரணையில் விரைவில் தெரியவரும்.