தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு 16.02.12 முதல் 18.02.12 வரை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அருகிலுள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டு கையில் கிடைத்தவுடன், தேர்வரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், எழுதவிருக்கும் பாடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
குறிப்பிட்டுள்ள விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அரசு தேர்வு இயக்குனரகத்தில் உள்ள கூடுதல் செயலரை நேரில் அல்லது தபால் மூலம் அணுகலாம்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், கண்டிப்பாக செய்முறைத் தேர்வை செய்வதோடு எழுத்து தேர்வையும் எழுத வேண்டும். இவ்வாறு அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்