சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் வழங்கும் முதுநிலை தொழிற் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறது.
அதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அண்ணா பல்கலை வளாகத்தில் நேரில் சென்றோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, உட்பட 15 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும்.