சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், பிளஸ்2 செய்முறைத் தேர்வு 6 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்கம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி, அதேமாதம் 25ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாவட்ட மாணவர்கள் பிப்ரவரி 2 முதல் 20ம் தேதி வரை செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தானே புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக தாக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரணப் பணிகள் மிக மெதுவாக மேற்கொள்ளப்பட்டதால், அரையாண்டு தேர்வு விடுமுறைகூட அம்மாவட்டத்திற்கு நீட்டிக்கப்பட்டது. பல பள்ளிகளின் மின்இணைப்புகளும் பாழானது. இதுபோன்ற காரணங்களால், பிளஸ்2 செய்முறைத் தேர்வை அம்மாவட்டத்திற்கு மட்டும் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, இதற்கான உத்தரவு வெளிவந்துள்ளது.
இந்த ஆண்டு சுமார் 9.63 லட்சம் மாணவர்கள் பிளஸ்2 பொதுத் தேர்வை எழுதுகையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26,000 பேர் அத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்தப் புதிய உத்தரவின்படி, பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி, அதேமாதம் 25ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாவட்ட மாணவர்கள் பிப்ரவரி 2 முதல் 20ம் தேதி வரை செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தானே புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக தாக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரணப் பணிகள் மிக மெதுவாக மேற்கொள்ளப்பட்டதால், அரையாண்டு தேர்வு விடுமுறைகூட அம்மாவட்டத்திற்கு நீட்டிக்கப்பட்டது. பல பள்ளிகளின் மின்இணைப்புகளும் பாழானது. இதுபோன்ற காரணங்களால், பிளஸ்2 செய்முறைத் தேர்வை அம்மாவட்டத்திற்கு மட்டும் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, இதற்கான உத்தரவு வெளிவந்துள்ளது.
இந்த ஆண்டு சுமார் 9.63 லட்சம் மாணவர்கள் பிளஸ்2 பொதுத் தேர்வை எழுதுகையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26,000 பேர் அத்தேர்வை எழுதுகின்றனர்.