Monday, January 16, 2012

விவசாய படித்தவர்களுக்கு தோட்டக்கலை ஆசிரியர் வேலை வழங்கப்படுமா? -16-01-2012




மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, தோட்டக்கலை ஆசிரியர் பிரிவு வேலை வாய்ப்பில் விவசாயத்தை பாடமாக எடுத்த படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை மற்றும் தானிய வகைகளை சேர்த்து படித்த விவசாய பாட பிரிவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக ஓவியம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பட்டியல் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கோரப்பட்டுள்ளது. இப்பட்டியலை தயார் செய்யும் பணியில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் பகுதி நேர ஆசிரியர்களில் முதல் நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தற்போது, கூடுதலாக தோட்டக்கலை, கம்ப்யூட்டர், இசை ஆசிரியர் பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து அந்தந்த வட்டார வள மைய அலுவலர்கள் மூலம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், தோட்டக்கலை பகுதி நேர ஆசிரியர் பிரிவுக்கு கடந்த 1987ம் ஆண்டு வரை விவசாயத்தை பாடமாக படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலையை படித்த சான்று இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 1987க்கு பின் தான் தோட்டக்கலை பாடமாக அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் வரை விவசாயப் பாடத்தை படித்து சான்று பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
தோட்டகலை பாடப்பிரிவில், காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கிரைகள், அழகு செடிகள், பூக்களை பற்றி படிக்கின்றனர். ஆனால், விவசாய பாடப்பிரிவில் கோதுமை, அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட அனைத்து தானிய வகைகளும்; தோட்டக்கலையில் காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கீரைகள், அழகு செடிகள், பூக்கள் ஆகியவைகளை சேர்த்தே விவசாயப் பாடமாக படித்தனர். இதற்கு, ஆசிரியர் தொழிநுட்ப சான்று படிப்பு என்று பெயரிடப்பட்டது. இப்பயிற்சி தொழில்நுட்ப தேர்வு இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்டது.
இது குறித்து விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் கூறியதாவது:மாநில அளவில் தேர்வானர்களை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தை மையமாக கொண்டு, தச்சு, ஓவியம், இசை, விவசாயம் ஆகிய சான்று படிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடை விடுமுறையின் போது 45 நாட்களுக்கு சிறந்த ஆசிரியர்களால் வகுப்பு எடுத்தனர்.
படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் தொழில்நுட்ப சான்றை சென்னை நுங்கம்பாக்கம், தொழில்நுட்ப தேர்வு இயக்குனர் மூலம் வழங்கப்பட்டது. இது தெரியாத இப்போதைய அதிகாரிகள் வேலை வாய்ப்பு அலுவலங்களில் அரசின் (ஜி.ஓ.,171 தோட்டக்கலை) உத்தரவை காண்பித்து, விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 1987ம் ஆண்டுக்கு பின் விவசாய சான்றுக்கு பதிலாக தோட்டக்கலை என்று பெயர் மாற்றப்பட்டது.
1987 ஆண்டுக்கு முன் வரை விவசாயத்தை பாடமாக எடுத்து படித்தவர்கள் நிறையபேர் வேலையின்றி, 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தப்பட்சம் 20 தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, விவசாயத்தை பாடமாக படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இனிமேலும் எங்களை புறக்கணித்தால் யாரும் வேலை தரமட்டார்கள். இவ்வாறு அவர்கள் ரவி கூறினர்.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Trending

Archive