ஈரோடு: தமிழகத்தில் 752 அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளுக்கு கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளிகளில் நடந்த ஆய்வின்போது ஈரோட்டில் மட்டும் 9 பள்ளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் பெறாமலும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை நிறைவேற்றாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பதுடன், குழந்தைகளை பெற்றோர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மட்டும் சேர்க்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
thanks : http://m.newshunt.com/Dinamalar/breakingnews/12367870
thanks : http://m.newshunt.com/Dinamalar/breakingnews/12367870