ஊர்ப்புற நூலகர்கள், 260 பேருக்கு கவுன்சிலிங் நடத்தாமல், மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊர்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும், 260 நூலகர்கள், மூன்றாம் நிலை நூலகர்களாக (கிளை நூலகங்களில் பணி) பதவி உயர்வு செய்யப்படுவர் என, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 260 பேருக்கும் பதவி உயர்வு வழங்க, நூலகத்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. வழக்கமாக, பணிமூப்பு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தி, நூலகர்கள் விரும்பும் இடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி, உத்தரவுகள் வழங்கப்படும்.
ஆனால், இம்முறை கவுன்சிலிங் நடத்தாமல், 260 பேருக்கும் பதவி உயர்வு ஆணைகள், சமீபத்தில் வழங்கப்பட்டன. இயக்குனரகத்தின் இந்நடவடிக்கை, நூலகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகத்தின் மாநில தலைவர் ராஜேஷ்குமார், இது குறித்து கூறும்போது, "வழக்கத்திற்கு மாறாக பதவி உயர்வு உத்தரவுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், பணிமூப்பு தகுதி உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களிலாவது, இதுபோன்ற விதிமீறல்களைச் செய்யாமல், கவுன்சிலிங் மூலம் உத்தரவுகள் வழங்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஊர்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும், 260 நூலகர்கள், மூன்றாம் நிலை நூலகர்களாக (கிளை நூலகங்களில் பணி) பதவி உயர்வு செய்யப்படுவர் என, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 260 பேருக்கும் பதவி உயர்வு வழங்க, நூலகத்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. வழக்கமாக, பணிமூப்பு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தி, நூலகர்கள் விரும்பும் இடங்களுக்கு பதவி உயர்வு வழங்கி, உத்தரவுகள் வழங்கப்படும்.
ஆனால், இம்முறை கவுன்சிலிங் நடத்தாமல், 260 பேருக்கும் பதவி உயர்வு ஆணைகள், சமீபத்தில் வழங்கப்பட்டன. இயக்குனரகத்தின் இந்நடவடிக்கை, நூலகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகத்தின் மாநில தலைவர் ராஜேஷ்குமார், இது குறித்து கூறும்போது, "வழக்கத்திற்கு மாறாக பதவி உயர்வு உத்தரவுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், பணிமூப்பு தகுதி உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களிலாவது, இதுபோன்ற விதிமீறல்களைச் செய்யாமல், கவுன்சிலிங் மூலம் உத்தரவுகள் வழங்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.