Wednesday, October 17, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்- தினமணி செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்- தினமணி செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


அதன் பிறகே, ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை மூலம் நிரப்பப்பட உள்ளன.

முதலில் 2,246 பேர் தேர்வு செய்யப்படுவதால், "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டாலும் பெரும்பாலும் இவர்களில் தகுதியான அனைவருக்கும் பணி நியமனம் கிடைத்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களுக்கு ஓரிரு வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்றது. 6.6 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

2,246 பேருக்கு பணி நியனம் வழங்கப்பட இருந்த நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை பணியில் நியமிக்கக் கூடாது என்றும், ஆசிரியர் நியமனத்துக்கு என தனியாக தேர்வு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, 2,246 பேருக்கு பணி நியமனம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான உயர் நிலைக் குழு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. இந்த "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனமும் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் இப்போது ஒன்றாக பணி நியமனம் நடத்தப்படுமா என்று சிலர் சந்தேகங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த நேரத்தில் (90 நிமிஷங்கள்) கடினமான கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்து இவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மறுதேர்வில் கூடுதல் நேரத்தில் (3 மணி நேரம்) தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது. அதோடு, தகுதித் தேர்வில் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு முன்கூட்டியே பணி நியமனம் வழங்குவதுதான் இயற்கை நீதி ஆகும்.

புதிய தேர்வு முறையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியவுடன் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive