Wednesday, October 31, 2012

பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ம் விடுமுறை: தமிழக அரசு

பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ம் விடுமுறை: தமிழக அரசு


நீலம் புயல் பாதுகாப்பு நடவடிக்கையாக, தமிழக கடலேரா மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 1) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: சனிக்கிழமைகளில் நடக்குமா?


சென்னை: நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும் பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல் ஆயுத பூஜை, 24ல் விஜயதசமி, 27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஒன்பது மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், கல்வித்துறை நிர்ணயித்த காலத்திற்குள், பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரையாண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, கால அவகாசம் வழங்கப்படுகிறது. மழையால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.
இந்த நாட்களை, ஈடு செய்ய வேண்டும் எனில், அரையாண்டு தேர்வு வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும், பள்ளிகளை நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. சனிக்கிழமைகளில், பள்ளியை நடத்த வேண்டும் என, இதுவரை, கல்வித்துறை எவ்வித உத்தரவையும் வழங்கவில்லை.
எனினும், பாடத்திட்டங்களை முடிக்க, பள்ளி நிர்வாகங்களே, சனிக்கிழமையும், அரை நாள் பள்ளியை நடத்தலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தி, பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive