திருநெல்வேலி: தமிழகத்தில் 10 மையங்களில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில் 2010-11ம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.இதில் தமிழ் 130, ஆங்கிலம் 146, கணிதம் 205, இயற்பியல் 111, வேதியியல் 137, தாவரவியல் 93, விலங்கியல் 84, வரலாறு 43, புவியியல் 5, பொருளாதாரம் 77, வணிகவியல் 74, அரசியல் அறிவியல் 13, உடற்கல்வி ஆசிரியர் 35 பணியிடங்களுக்கு 5,368 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 10 மையங்களில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.
இதில் நெல்லையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும், ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், மதுரையில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டையில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.
சேலத்தில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களுக்கும், கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், விழுப்புரத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும், வேலூரில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும், சென்னையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தமிழகத்தில் 2010-11ம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.இதில் தமிழ் 130, ஆங்கிலம் 146, கணிதம் 205, இயற்பியல் 111, வேதியியல் 137, தாவரவியல் 93, விலங்கியல் 84, வரலாறு 43, புவியியல் 5, பொருளாதாரம் 77, வணிகவியல் 74, அரசியல் அறிவியல் 13, உடற்கல்வி ஆசிரியர் 35 பணியிடங்களுக்கு 5,368 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 10 மையங்களில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.
இதில் நெல்லையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும், ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், மதுரையில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டையில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.
சேலத்தில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களுக்கும், கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், விழுப்புரத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும், வேலூரில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும், சென்னையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.