அரசு வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் முறை ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிலும் சிறுபான்மையினத்தவருக்கு 4.5% உள் ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு அறிவிப்பினை வெளியிட்டது.
இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டை பொதுத் துறை நிறுவனங்களும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்டியன், புத்தம், சவுராஷ்டிரம் ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினத்தவராகக் கருதப்படுவர்.
இது குறித்து பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டில் மொத்தம் 249 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.