திருப்பூர்:ஓவியம், இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடம் தற்காலிகமாக நிரப்புவதற்காக விண்ணப்பம் வழங்கப்படுகிறது; வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது.பல்வேறு இடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக காலியாக உள்ள ஒவியம், இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1,164 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் துவங்கியது; 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
கல்வி அதிகாரிகள் குழு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பர். இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இதர கல்வி சான்றிதழ்களுடன் அவர்கள் வந்து பங்கேற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். மாதம் ரூ.5,000 வீதம் சம்பளம் வழங்கப்படும்.பதவிக்கு முன் பயிற்சிக்கு தயார்: ஏற்கனவே சென்னை சென்று ஒவியம், இசை மற்றும் உடற்பயிற்சி குறித்து பயிற்சி பெற்ற இடைநிலை கல்வித் திட்ட ஆசிரியர்கள், "சீனியர்' ஆசிரியர்கள் குழு, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தர தயாராக உள்ளது. இப்பயிற்சி ஜனவரியில் முடிந்த பின், ஆசிரியர்கள் பணிக்கு அனுப்படுவர்.
கல்வி அதிகாரிகள் குழு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பர். இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இதர கல்வி சான்றிதழ்களுடன் அவர்கள் வந்து பங்கேற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். மாதம் ரூ.5,000 வீதம் சம்பளம் வழங்கப்படும்.பதவிக்கு முன் பயிற்சிக்கு தயார்: ஏற்கனவே சென்னை சென்று ஒவியம், இசை மற்றும் உடற்பயிற்சி குறித்து பயிற்சி பெற்ற இடைநிலை கல்வித் திட்ட ஆசிரியர்கள், "சீனியர்' ஆசிரியர்கள் குழு, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தர தயாராக உள்ளது. இப்பயிற்சி ஜனவரியில் முடிந்த பின், ஆசிரியர்கள் பணிக்கு அனுப்படுவர்.