தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் பயிற்சி ஆரம்பமாகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் பணியிடை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும், இதற்கான விரிவான அறிவுரைகள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் இப்பயிற்சியை அளிப்பதற்கான கருத்தாளர் பணிமனை வரும் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
கருத்தாளர்களுக்கு வரும் 2ம் தேதி இரவு முதல் உணவு மற்றும் உறைவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான உடற்கல்வி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து அனைவரையும் அனுப்ப வைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்தாளர்களுக்கு வரும் 2ம் தேதி இரவு முதல் உணவு மற்றும் உறைவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான உடற்கல்வி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து அனைவரையும் அனுப்ப வைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.